2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு வெற்றி என்கிறார் ரணில்

Super User   / 2009 டிசெம்பர் 31 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதற்கு இணங்கியிருப்பதாகக் கூறிய ரணில் விக்கிரமசிங்க, தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அறிவிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு பகுதிகளிலிருக்கும் மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .