2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக  சுகாதார அதிகாரிகளுடனான  சந்திப்பொன்று நேற்று முற்பகல் யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களத்தில் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன், வடக்கு மாகாண கல்வித் திணைக்களங்களின் பணிப்பாளர்கள், வைத்தியர்கள்,  பிராந்தியப் பணிப்பாளர், யாழ். அரச அதிபர், பிரதேசசபைச் செயலாளர்கள்  பொது சுகாதாரப் பரிசோதகர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின்போது டெங்கு ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் குறித்து ஆளுநரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.








You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .