2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உவத்தென்ன சுமண தேரருக்கு பிணை

Super User   / 2010 டிசெம்பர் 13 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வண. உவத்தென்ன சுமண தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அவர் பிணையில் செல்வதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனையில்லை என நீதிபதியிடம் அரச சட்டத்தரணி  தெரிவித்தார். அதையடுத்து ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 10 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்வதற்கு வண உவத்தென தேரர் அனுமதிக்கப்பட்டார்.

அதேவேளை, வாரத்திற்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வுப் பணியக அலுவலகத்திற்கு அவர் சமுகமளிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. (TFT)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .