2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பரீட்சைகள் திணைக்கள கணினி பிரிவு அதிகாரிகளிடமும் விசாரணை

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் விஞ்ஞான வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாகவே வெளியானதாக கூறப்படுவது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் கணினிப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தனியார் கல்வி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரால் வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாளில் உள்ள கேள்விகளில் 18 கேள்விகளும் படங்களும் விடைகளும் பரீட்சையின் போது வழங்கப்பட்ட வினாத்தாளில் உள்ள கேள்விகளும் பதில்களும் படங்களும் ஒரேமாதிரியாக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததை அடுத்தே இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி தனியார் கல்வி நிறுவன உரிமையாளரின் அச்சகத்திலே பரீட்சை வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் அதனால் மேற்படி தனியார் கல்வி நிறுவனம் இந்த வினாத்தாள்களை பரீட்சைக்கு முன்பே விநியோகித்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் பரீட்சைகள் திணைக்கள கணினி  பிரிவு அதிகாரிகளிடம் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான வினாத்தாள்கள் முன்கூட்டியே விநியோகிக்கப்பட்டுள்ள விடயம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அதற்கு பொறுப்பானவர்களுக்கு அதிகப்பட்சமான தண்டனை நிச்சியமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். (கெலும் பண்டார)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .