2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

512 சுற்றிவளைப்புகள்; 25 உணவகங்களுக்கு சீல்

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த 1,543 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் 512 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரொஹான் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பின்போது, ஹோட்டல்கள், பல்பொருள் அங்காடிகள், சில்லறைக் கடைகள், வர்த்தக நிலையங்கள், சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட சுமார் 25,600 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது 1,45,60,000 ரூபா பெறுமதியான நுகர்வுக்கு ஒவ்வாத உணவுப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு,  25 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின், உள்ளடக்கம், பொதி செய்யப்பட்ட மற்றும் காலாவதித் திகதிகள், விலை, நிறை போன்ற தகவல்கள் பொதிகளில் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் நுகர்வோர் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கையில் குறித்த தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .