2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

6 ஓயாக்களால் ஆபத்து

Editorial   / 2018 மே 17 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மல்வத்து ஓயா, தெதுரு ஓயா, கலா ஓயா, மீ ஓயா, மஹா ஓயா, அத்தனகல்ல ஓயா ஆகிய 06 நீரேந்துப் பிரதேசங்களின் நீர் மட்டம், மிக வேகமாக அதிகரித்து வருவதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனால், மேற்படி நீரேந்துப் பிரதேசங்களை அண்டியுள்ள மக்களை, மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும், நீர்ப் பெருக்கு ஏற்படும் பட்சத்தில், உடனடியாக, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், மேற்படி மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக, தெதுரு ஓயாவின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், அத்தனகல்ல ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள வேண்டு​மாயின், 117 என்ற அவசர அழைப்புக்குத் தொடர்பை ஏற்படுத்தி, பொதுமக்களுக்கான தகவல்களைத் திரட்டிக்கொள்ள முடியுமென, கொடிப்பிலி மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .