2024 மார்ச் 28, வியாழக்கிழமை

6631 பேர் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 12 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 6 ஆயிரத்து 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டோரில் இராணுவ அதிகாரிகள் 13 பேரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையிலிருந்து தப்பிச் சென்றோர், உத்தியோகபூர்வமாக விலகிச் செல்வதற்காக பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டது. எனினும் அதன்போது தம்மைப் பதிவு செய்துகொள்ளாதவர்களைக் கைது செய்ய பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்பிரகாரம், இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 5ஆயிரத்து 425 பேரும், கடற்படையிலிருந்து தப்பிச் சென்ற ஆயிரத்து 64 பேரும் விமானப்படையிலிருந்து தப்பிச் சென்ற 142 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X