Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் சலுகை அரசியலில் ஈடுபடக் கூடாதென கேட்டுக்கொண்டுள்ள முன்னாள் வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், 70 வருட உரிமைப் போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடக் கூடாதெனவும் கோரியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,
பாராளுமன்றத்துக்கு தன்னை தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சிகளுக்கும் நன்றிகூறியுள்ளார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டிருக்காவிட்டால் தனது வெற்றி சாத்தியமாகியிருக்காதென்றும், இந்த கூட்டணியின் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலான தலைமைத்துவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழில் 4 ஆசனங்களையும், வன்னி மாவட்டத்தில் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்த்திருந்த போதும் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உரிமை அரசியலை தவிர்த்து சலுகை அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் சாடினார்.
இதே செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து 70 வருட போராட்டத்துக்கு சாவுமணி அடித்துவிடக்கூடாதென அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
7 hours ago
8 hours ago