2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொலை வழக்கில் மூவருக்கு மரணதண்டனை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.மன்சூர்)

கொலை வழக்கொன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மூவருக்கு பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.

பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி துமல் திலக்கரட்ன கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

1993ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பலப்பிட்டிய கந்தேகொட என்ற இடத்தில் பீ.விஜேமுனி டி சில்வாவை கத்தியால் குத்தி கொலை செய்ததாக பீ.ஜயலத் ஜயசேகர, டீ. டனிசமன்,  பிரேமசிறி ஆகிய மூவர் மீதும் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரச தரப்பு சட்டத்தரணியாக விராஜ் வீரசூரிய ஆஜரானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .