2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

அமைச்சுகளுக்கு இடையே விளையாட்டு போட்டி

Niroshini   / 2016 மார்ச் 31 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், அமைச்சுகளுக்கு இடையே விளையாட்டு போட்டி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இப்போட்டிகள், திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் சித்திரை மாதம் 04ஆம் திகதி தொடக்கம் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மென்பந்து கிரிக்கெட், வலைப்பந்து, எல்லே, கரப்பந்து, உதைபந்து ஆகிய போட்டிகள் ஆண், பெண்களுக்கு இடையே நடத்தப்படும்.

சித்திரை புதுவருடத்தை ஒட்டி வருடாந்தம் இப்போட்டிகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இதேவேளை, கலாசார போட்டிகள் எதிர்வரும் 21ஆம் திகதி காலை 8.00 மணிக்கு உட்துறைமுக வீதி இளைஞர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .