2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலைபேசித் திருட்டுடன் கைதானோருக்குப் பிணை

Thipaan   / 2016 ஜூலை 20 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் iதுசெய்யப்பட்டிருந்த இளைஞர்கள் இருவரையும், தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணைகளில் செல்ல, கந்தளாய் நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.ஜீ.தம்மிக, இன்று புதன் கிழமை (20) உத்தரவிட்டார்.

அத்துடன், ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இருவருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, திங்கட்கிழமை (18) மாலை கந்தளாய் தலைமையகப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கடந்த   ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 19 மற்றும் 21 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கைதாகியிருந்தனர்.

அலைதொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையின் பிரகாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .