2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இனந்தெரியாதோரால் கடை தீ வைப்பு

Gavitha   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லை நகர், மேற்கு கிராம சேவையாளர்  பிரிவில் இயங்கிவந்த மாலை நேர கடையொன்று, இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக, குறித்த கடை உரிமையாளரினால், மூதூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பொருட்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அங்குள்ள சில பொருட்களும் களவாடப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X