2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணை

Gavitha   / 2015 நவம்பர் 22 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

1.8 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பெரியாற்றமுனையைச் சேர்ந்த 60 வயதான நபரை, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு  திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் சனிக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர், திருகோணமலை, சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,  கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாக ;பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .