2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிகுமார், பொன் ஆனந்த், ஏ.எம்.ஏ.பரீத்

கிழக்கு மாகாணத்துக்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட  அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும், அலுவலக உதவியாளர்களுக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, இன்று  வெள்ளிக்கிழமை, திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போது, அபிவிருத்தி உத்தகயோகத்தர்கள் 170 பேருக்கும் , அலுவலக உதவியாளர்கள்  30 பேருக்கும் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.   

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதாணி, கிழக்கு மாகாண காணி மகளிர் விவகார அமைச்சர் ஆரியவதி கலபதி  மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X