2024 மார்ச் 28, வியாழக்கிழமை

புதிய வீதிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

‘100 நாள்களில் 200’ வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக, கிண்ணியா எழிலரங்கு பின் வீதிக்கான கொங்ரீட் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று (15) கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தியின் வேண்டுகோளிற்கிணங்க, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது, 100 மீற்றர் தூரத்தைக் கொண்ட கொங்ரீட் வீதி, பத்து இலட்சம் ரூபாய் நிதியில் ஆரம்பிக்கப்பட்டது.

மக்களின் நீண்ட நாள் தேவையாக உணரப்பட்ட இவ் வீதி கொங்ரீட் வீதியாக மாற்றப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X