2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

புற்களை பிடுங்கிக்கொண்டிருந்தவருக்கு பாம்புக்கடி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                          

திருகோணமலை, கந்தளாய் பிரதேசத்தில் பாம்புக் கடிக்கு உள்ளான அப்பகுதியைச் சேர்ந்து டபிள்யூ.எம்.தர்மசேகர (வயது 52)  கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

வீட்டின் பின் வளவில் வளர்ந்திருந்த புற்களை இவர் புதன்கிழமை (13) மாலை பிடுங்கிக்கொண்டிருந்தபோதே பாம்புக் கடிக்கு உள்ளானார்.

பாம்பு கடித்த இடத்திலிருந்து இரத்தம் வடிந்ததுடன், இவர் மயக்கம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .