2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு அபராதம்

George   / 2016 ஜூலை 09 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2 கிலோகிராம் மரை  இறைச்சி வைத்திருந்த ஒருவரை 10ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான், வெள்ளிக்கிழமை(8) உத்தரவிட்டார்.                                  

சேருநுவர,எல்.பி. நான்கு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.                         

குறித்த சந்தேகநபர் வீட்டில் மரை இரைச்சி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை (7) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       

குறித்த நபரை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்திய போதே இந்த  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .