2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாட்டுடன் மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பற்றியது; சாரதி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் -சேருநுவர பிரதான வீதியூடாக அதிவேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளொன்று மாட்டுடன் நேற்று வியாழக்கிழமை இரவு மோதியதில்
மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதுடன், அதன் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்;தளாயைச் சேர்ந்த வீ.பீ.நெத்சிறி நளிந்த (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புதிய மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளானதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .