2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூதூரில் விபத்து: இருவர் காயம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் மணிக்கூட்டுக் கோபுரத்தருகில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் கடற்படை சிப்பாய் ஒருவரும் சிவிலியர் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில், மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, மூதூர் கிழக்கு கட்டைபரிச்சான் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபரும் சம்பூர் கடற்படை முகாமின் சிப்பாயுமே படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X