Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Super User / 2010 நவம்பர் 07 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில், எஸ்.எஸ்.குமார்)
மூதூர் கொட்டியாரக் குடாவில் இன்று காலை ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால் தக்வா நகர் மற்றும் ஹபீப் நகர் கிராமங்களைச் சேர்ந்த 450 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.
இடம்பெயர்ந்த குடும்பங்கள் முதூர் உமர் பாரூக் வித்தியாலயம் மற்றும் தாருல் ஜின்னா வித்தியாலயம் என்பவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பகல் உணவை தக்வா நகர் மீன்பிடி சங்கமும் தக்வா நகர் பிரதேச அபிவிருத்தி சங்கமும் இணைந்து வழங்கின. இடம்பெயர்ந்துள்ள மக்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் கிராம சேவகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
9 hours ago