2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிண்ணியா ஆற்றில் தவறி விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முபாறக்)

கிண்ணியா, அபூபக்கர் ஆற்றில் தவறி விழுந்து நான்கு வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிர்ழந்துள்ளான். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், பௌசுக் நிஹார் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார். கிண்ணியா, ஒரிக்கன்  பாலத்தினூடாகப் பயணித்துக்கொண்டிருக்கும் போதே இந்த சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கிண்ணியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .