2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தாய்வான் வைத்தியர்களின் வைத்திய முகாம்

Super User   / 2010 ஒக்டோபர் 31 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ்.எஸ்.குமார்)

தாய்வான் வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று  திருகோணமலை, சேனையூர் மத்திய கல்லூரியில் வைத்திய முகாம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்குழுவில் 4 மருத்துவ நிபுணர்கள், 3 மருந்தாளர்கள், 6 தாதிகள் மற்றும் உதவியாளர்கள் அடங்கலாக 30 பேர்  உள்ளனர்.

3 தினங்கள் இம்முகாம் இங்கு நடத்தப்படவுள்ளது. கண், பொதுசுகாதாரம் போன்ற பல்வேறு வைத்திய சேவைகள் இங்கு மேற்கொள்ளப்படும்.

எதிர்வரும் 03.11.2010  புதன்கிழமை  தொடக்கம் 3 தினங்கள் இதுபோன்ற மற்றொரு முகாம் பாட்டாளிபுரம்  பாடசாலையிலும் நடத்தப்படவுள்ளது.

இவ்வைத்திய முகாமிற்கான இணைப்பினை திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞான குணாளன் மேற்கொண்டு வருகின்றார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .