2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 08 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 
திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணொருவரையும் பெண்கள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஜேசிங்க தெரிவித்தார்.

ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த 27, 62 வயதான ஆண்களும் 65 வயதான பெண்ணும்  பல வருட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களென பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

ரொட்டவெவ பகுதியில் 18 வயதிற்கு குறைந்தவர்கள் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு வருவதும் குடும்பப் பிரச்சினைகள் கஞ்சா பாவனையினாலேயே அதிகம் அதிகரித்து வருவதாகவும் கஞ்சா பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .