2024 மார்ச் 28, வியாழக்கிழமை

திருமலையில் சிறுவர் பாதுகாப்பு கொள்கை நிகழ்ச்சி திட்டம்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 17 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

சிறுவர் பாதுகாப்புக் கொள்கை நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் சிறுவர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சிறுவர் குழுக்களை எகெட் கரரித்தாஸ் நிறுவனம் அமைத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக கிண்ணியா கல்வி வலயத்துக்குட்பட்ட குறிஞ்சாங்கேணி அறபா மகா வித்தியாலயத்தில் சிறுவர் பாதுகாப்பு குழுவை அமைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
 
திருகோணமலை பட்டணமும் சூழலும் மற்றும் கிண்ணியா பகுதிக்கு பொறுப்பான சிறுவர் நன்னடத்தை அதிகாரி திரு.பர்ஹான் அதிபர் மொஹமட் நஜாத் அவர்களும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் அன்டனி மில்ரோய் மற்றும் பிரதி அதிபர், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

நன்னடத்தை அதிகாரி சிறுவர் என்றால் யார், சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சனைகளை யாரிடம் எவ்வாறு முறையிடலாம் போன்ற விடயங்களை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.


You May Also Like

  Comments - 0

  • Mahadevah Tuesday, 23 November 2010 03:25 AM

    என்ன ஒரு விபரீதமான தலைப்பு இந்தச் செய்திக்கு!!! (கொள்ளை!)

    Reply : 0       0

    Tamil Mirror.lk Tuesday, 23 November 2010 05:24 AM

    தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி Mahadevah

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X