2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மூதூரில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

சட்டரீதியான ஆவணங்களை பெறுவதற்கான நடமாடும் சேவையொன்று திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசியமொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் நீதிநியாத்தை சமமாக அணுகும் கருத்திட்டம் ஆகியன இணைந்து இந்த நடமாடும் சேவையை ஏற்பாடு செய்திருந்தன.

மூதூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் அடையாள அட்டை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், திருமண பிரதிச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றும்கொள்ளும் நோக்கில் 700 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து பயனடைந்தனர். அத்துடன் தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் இலவசமாக பிடிக்கப்பட்டதுடன், ஏனைய

ஆவணங்களுக்கான முத்திரைக் கட்டணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X