2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு முதல்வருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் இற்கும் இடையிலான சந்திப்பொன்று திருகோணமலை  முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சந்திப்பானது சிநேகபூர்வ கலந்துரையாடலாக அமைந்திருந்தது. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் 2012ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதார மேம்பாடு, மற்றும் சிறுவர் கல்வி அபிவிருத்தி என்பன தொடர்பாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் குறித்த சில உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் உயர்ஸ்த்தானிகர் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.தேவராஜன் தெரிவித்தார். (படங்கள் : முதலமைச்சர் ஊடகப்பிரிவு)


You May Also Like

  Comments - 0

  • kalmunaiyaan Sunday, 27 November 2011 06:12 AM

    இது ஒரு மரியாதையான சந்திப்பு//////

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .