2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு முதலமைச்சர் - பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் சந்திப்பு

Super User   / 2012 நவம்பர் 19 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திற்கும் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் ரொபி புலொகிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மற்றும் மாகாண சபையின் புதிய நிர்வாக செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இந்த சந்திப்பில் முதலமைச்சின் செயலாளர் ஏ.எம்.அஸீஸும் கலந்துகொண்டார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தண்டாயுதபாணியையும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் தனியாக சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X