2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஆலங்கேணி - நெடுந்தீவு வீதி புனரமைப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணி - நெடுந்தீவு வீதியின் புனரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பிக்கப்பட்டன.

நெடுஞ்சாலை அமைச்சின் 5 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ், இந்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இந்த புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் சி.கிருஷ்னேந்திரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் இப்றாகீம் முஜீப், கிண்ணியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கே.எம்.நிஹார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .