2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

200 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்


தமிழர் முன்னேற்ற கழகத்தின் ஏற்பாட்டில் தம்பலகாமம் பகுதியில் வசதி குறைந்த 200 மாணவர்களுக்கு சனிக்கிழமை(7) அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.


ஆதிகோணேஷ்வரா மகா வித்தியாலயம், பாரதிபுரம் வித்தியாலயம், பாலம்பொட்டாறு சித்திவிநாயகர் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களுக்கே இக் கொப்பிகள் வழங்கப்பட்டன.


தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பிரதான அமைப்பாளர் வி.ஜனகன், அமைப்பாளர் ச.விமலகாந்தன், ஜனகன் நிதியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ரட்ணசிறி ரந்தெனிய ஆகியோர் இவற்கை மாணவர்களிடம் கையளித்தனர்.


இவர்களுடன் தமிழர் புனர்வாழவு கழகத்தின்  திருகோணமலை அமைப்பாளர்  புவிதரன், ஐ.டி.எம் கல்வியகத்தின் பணிப்பாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .