2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இரு கடைகளில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 12 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, தம்பலகாமம் 96ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு பலசரக்குக் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தம்மிடம் அக்கடை உரிமையாளர்கள் நேற்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்ததாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கடைகளை செவ்வாய்க்கிழமை (11) இரவு பூட்டிவிட்டுச் சென்றதாகவும் கடைகளை திறப்பதற்காக நேற்று புதன்கிழமை காலை வந்தபோது, இரண்டு கடைகளும் உடைக்கப்பட்டு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X