2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

70 வயதான பெண் அடித்துக் கொலை

Super User   / 2011 ஜனவரி 11 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசீம்)

திருகோணமலை மத்திய வீதி உவர்மலை பிரதேசத்தை சேர்ந்த 70 வயதான பத்மதேவி ஸ்ரீஸ்கந்தராஜா என்ற பெண்மணி இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு அடித்து கொல்லப்பட்டுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .