2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உத்தியோகத்தரை தாக்கிய மூவருக்கு மறியல்

எப். முபாரக்   / 2018 ஜூன் 13 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாயில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய மூவரை, இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கந்தளாய் நீதிவான் துசித்த தம்மிக்க, நேற்று (12) உத்தரவிட்டார்.

கந்தளாயைச் சேர்ந்த 25,30, 33 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும், மது அருந்திவிட்டு முச்சக்கர வண்டியில் சென்ற போது, வீதிப் பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர், முச்சக்கர வண்டியை நிறுத்தி, அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்ட போதே, மேற்படி மூவரும் இணைந்து தாக்கியுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .