2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கட்டுப் பணம் செலுத்தியது ஈ.பி.டி.பி

பொன் ஆனந்தம்   / 2017 நவம்பர் 30 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்த்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள், எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் நிலையில், திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி) மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தைத் தாம் நேற்று (29) செலுத்தியதாக, மாவட்டபொறுப்பாளர்  த.புஸ்பராஜா தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தம்பலகமம், மற்றும் உப்புவெளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .