2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணாமல்போனோர் அலுவலகத்தின் அதிகாரிகள் திருகோணமலைக்கு விஜயம்

Editorial   / 2018 மே 31 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், வடமலை ராஜ்குமாா்,ஹஸ்பர் ஏ ஹலீம்

காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள், எதிர்வரும் 13ஆம் திகதி, திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதன்போது, திருகோணமலை - உவர்மலை இந்து கலாசார மண்டபத்தில், காலை 9 மணிக்கு, காணாமல் போனோரின் உறவுகளையும், மதியம் 2 மணிக்கு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவ்வலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்பு நடவடிக்கையின் முதலாவது கட்டத்தில், திருகோணமலை தவிர, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கும் அவர்கள் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X