2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், ஏ.எம்.ஏ.பரீத், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, இலிங்க நகரில் இரு வகையான போதை மாத்திரைகளை வைத்திருந்த 24 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த  இளைஞனிடமிருந்து அதி சக்தி கொண்ட சிவப்பு நிறத்திலான 12 மாத்திரையும் வெள்ளை நிறத்திலான 14 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், மேலதிக விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட  போதைமாத்திரைகளுடன் திருகோணமலை தலைமையக பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X