2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மக்கள் எழுச்சிக் கூட்டம்

ஒலுமுதீன் கியாஸ்   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா தள வைத்தியசாலையை  மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்வாங்கப்படுவதற்கான மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம், கிராமக்கோட்டு மைதானத்தில், நேற்று (11) மாலை இடம்பெற்றது.

கிண்ணியா தள வைத்தியசாலையை "ஏ" தரத்துக்கு உயர்த்தி, மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்தில், மக்கள் அமைப்பின் தலைவர் எம். எம். மஹ்தி தலைமையில்,  இக்கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, பல்வேறு  சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, கிண்ணியா தள வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்கான சகல  தகுதியும் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X