2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

மக்கள் பாவனைக்கு வீதி திறந்து வைப்பு

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்லவின் நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட  கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாசல் ஜாபீர் மௌலவி வீதி, மக்கள் பாவனைக்குத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, கந்தளாய், பேராறு இலாஹியா பள்ளி வாயல் ஜாபீர் மௌலவி வீதீ, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சேருவல ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளருமான டொக்டர் அருண சிறி சேனவால் நேற்று (13) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் பேராறு அமைப்பாளர் ஸல்மான் பாரீஸின் வேண்டுகோளின் பேரில், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .