2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மானியமாக வழங்கிய வீடுகளுக்கு அடிக்கல் நடுகை

Editorial   / 2018 ஜூலை 12 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன்  கியாஸ்

திருகோணமலை, மாவட்டத்தில் சேருவிலத் தொகுதி, சூரியபுர பகுதியில்  5 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட்ட இடங்களில் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (11) காலை இடம்பெற்றது.

இவ் வீடுகளுக்கான அடிக்கல்லை  சேருவிலத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேன நட்டு வைத்தார்.

இவ் வீட்டுத் திட்டத்திற்கு  மேலும் 30 பக்கற் சீமெந்தும் மானியமாக வழங்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு மற்றும் நீர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச அவர்களின் அமைச்சியின் நிதி ஒதுக்கீட்டில் இந் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X