2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யானைத் தாக்குதல்: இருவர் காயம்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gifதிருகோணமலை, மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த மாமாவும் மருமகனும்  யானையொன்றின் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டனர்.

 

மஹதிவுல்வெவ விகாரகம பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வரும் இவர்களை, வீட்டுக்கு வருகை தரும் வழியில் யானை தாக்கியதாகவும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள், மஹதிவுல்வெவ - புபுதுபுர பகுதியைச் சேர்ந்த எச்.எம்.கிரிபண்டா (60 வயது) மற்றும் அவரது மருமகனான கே.அபேரத்ன (32 வயது) எனத் தெரியவருகின்றது.

யானையின் தாக்குதலால் மாமாவின் கால் உடைந்துள்ளதுடன், அவர் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரெனவும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் யானை மின்வேலிகளை அமைத்துத் தருமாறு, மஹதிவுல்வெவ பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .