2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கும்புறுப்பிட்டியில் உப்பளம் அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் கும்புறுப்பிட்டி பிரதேசத்தில் பாரிய உப்பளம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை உப்புக் கூட்டுத்தாபன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்திற்கென அப்பிரதேசத்தில் 1800 ஏக்கர் உவர் நிலக்காணி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் நாட்டில் பாரிய உப்பளமாக கும்புறுப்பிட்டி உப்பளம் திகழும் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே அம்பாந்தோட்டை,  புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உப்பளங்கள் காணப்படுவதாகவும் இவற்றினால் நாட்டின் உப்புத் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .