2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது’

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்வு  தொடர்பில் முழுமையான பார்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இருப்பதாக தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெளிமாவட்டங்களில் போட்டியிடுவதுத் தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும், இன்னும் அதுத் தொடர்பில் தீர்மானிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தனியார் வானொலியின் விழுதுகள் நிகழ்ச்சிக்கு வழங்கியிருக்கும் போட்டியிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ளதாவது, புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டஉடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. குறிப்பாக தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. 

இதனால், சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தபோதிலும், இவர் இதுவரையில் எந்தவிதமான பதிலையும் அவர் வழங்கவில்லை.

வடக்கு கிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் ஆராய்ந்துள்ளோம். இப்போதும் ஆராய்ந்து வருகிறோம். தீர்மானம் எடுக்கவில்லை. வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழும் கனிசமான தமிழர்களையும் கூட்டமைப்பு கண்டுக்கொள்வதில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.

வெளிமாவட்டங்களில் போட்டியிடுகின்றபோதும், அந்த மாவட்டங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வரும் தமிழ் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போட்டியிடுவதுத் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.

கொழும்பில் போட்டியிட்டால் மனோவுக்கு இரண்டு வகையில் தாக்கம் செலுத்தும். ஒன்று அவரின் வெற்றி வாய்ப்பை அது குறைக்கலாம், அல்லது அவரும் நாங்களும் இணங்கி வியுகம் அமைத்து போட்டியிட்டால், கொழும்பில் அவரது வெற்றி வாய்ப்பை குறைக்காமலும், இன்னொரு தமிழ் பிரதிதிநித்துவத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுத் தொடர்பில் உள்வாங்கப்பட்டிருந்தது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதுத் தொடர்பில் எதனையும் குறிப்பிடப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷவை உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதால், சஜித் பிரேமதாஸிவின் செல்வாக்கு குறையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X