2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புளத்சிங்கள மண்சரிவில் 9 பேர் பலி

Kogilavani   / 2017 மே 26 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புளத்சிங்கள, போகஹவத்தை மண்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இவர்களது சடலங்கள், பிம்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய அதிகாரி ஜீ.டீ.ஆர்.ருத்ரிகு தெரிவித்தார்.

இதேவேளை, இப்பகுதியில் மேலும் ஒரு வீடு, மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் சுவர்களில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் எஸ்.கே.சேனாதீர தெரிவித்தார்.

இதேவேளை, 10இற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் இக்கிராமங்களிலிருந்து வெளியேறியவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச செயலகம் வழங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .