2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

கொழும்பு குதிரைகள் நுவரெலியாவில்

Kogilavani   / 2016 மார்ச் 30 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெல்ட்டன்

கொழும்பில் நிலவி வரும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு, கொழும்பு பொலிஸின் குதிரைப்படை பிரிவைச் சேர்ந்த 34 குதிரைகள் நுவரெலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அப்பிரிவின் பணிப்பாளர் சீ.சீ.பமுனு ஆராய்ச்சி தெரிவித்தார்.

கொழும்பில் நிலவும் வெப்பமான காலநிலை மாற்றமடையும்வரை, இக்குதிரைகளை நுவரெலியாவில் வைக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார். குதிரைகளின் நலனை கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார். இந்நிலையில் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட குதிரைகள் தற்போது நுவரெலியா மைதானத்தில் விடப்பட்டுள்ளன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .