2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியை சந்தித்த டொனி

A.P.Mathan   / 2015 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்த பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தார். 

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை மிகவும் அமைதியான முறையிலும் சுதந்திரமான முறையிலும் நடத்துவதற்கு ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை டொனி பிளேயர் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டினார். 

இலங்கையினுடைய சுற்றுலாத்துறை வளர்ச்சியடைவதற்கு தன்னாலான பங்களிப்பினை வழங்குவதாகவும் இச்சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .