2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பண்ணைக்கு வந்த சிறுத்தைக் குட்டிகள்...

Kogilavani   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுக்க சேனாநாயக்க  பகுதியிலுள்ள கோழி பண்ணைக்கு அருகிலிருந்து இரண்டு சிறுத்தை குட்டிகளை மீட்டுள்ள பண்ணையின் உரிமையாளர் அவற்றைப் பாதுக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இச்சிறுத்தைக் குட்டிகள் கடந்த சில மாதங்களாக மேற்படி கோழி பண்ணைக்கு வந்து சென்ற நிலையிலே, நேற்று காலை(18) அவை பிடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 4 அடி நீளமான இந்த சிறுத்தைக் குட்டிகளைப் பாதுக்;க பொலிஸ் தலைமை அதிகாரி நிமால் பெரேரா மற்றும்  சந்தரசேகர தலைமையிலான குழுவினர் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .