2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிதறாத அவதானம்...!

Menaka Mookandi   / 2011 ஜூன் 10 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பொன்சேகா தரப்பிலான சாட்சிகளிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. இதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கா பொன்சேகா தரப்பு சாட்சியமாக வரவழைக்கப்பட்டு வாக்குமூலங்கள் பெற்றப்பட்டன. இதேவேளை, ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜேசிங்கவிடமும் இன்று நீதிமன்றம் குறுக்கு விசாரணைகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணைக்கான நீதிமன்றத்துக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் இராணுவ தளபதி பொன்சேகா ஆகியோர் நீதிமன்றை விட்டு வெளியேறுவதையும் இந்த வழக்கு விசாரணையை அவதானிப்பதற்காக இலங்கை வந்துள்ள அனைத்து நாடாளுமன்றங்களின் சங்கத்தைச் சேர்ந்த இராணி வழக்கறிஞரும் பாரிஸ்டருமான மார்க் ட்ரொவல், டிரான் அலஸுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம். Pix By :- Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .