2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

நம்ம ஊரு பேரீச்சம்...

Menaka Mookandi   / 2011 ஜூன் 21 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத் திலுள்ள பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பேரீச்சை மரங்கள் காய்ப்பதற்கு தொடங்கியுள்ளன. பாலை வனத்தில் மாத்திரமின்றி காத்தான்குடியிலும் பேரீச்சை மரங்கள் காய்க்கின்றன. இங்கு நடப்பட்டுள்ள பேரீச்சை மரங்களில் பல மரங்கள் பூத்தும் காய்த்தும் இருப்பதை இப் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • PTA Hassan Wednesday, 22 June 2011 12:09 AM

    அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நினைத்ததை சாதிக்கும் திறமை கொண்ட ஒருவர் அல்ஹம்துலில்லாஹ். பேரீச்சை மரங்கள், பைத்துல் முகதீஷ் பள்ளிவாசல், முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அலுவலகம், சுத்தமான கடற்கரை, அகன்ற வீதி. காத்தான்குடிக்கு செல்வது சவூதிக்கு சென்று வருவது போன்ற ஒரு அனுபவம்.

    Reply : 0       0

    mafas Wednesday, 22 June 2011 01:15 AM

    அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் வல்ல இறைவன் அல்லாஹ் ஒருவனுக்கே ...

    Reply : 0       0

    imthikaf Wednesday, 22 June 2011 02:17 AM

    பரவா இல்லை. இனி ஈச்சம்பழத்துக்கு விலை குறையும் அல்ஹம்துலில்லாஹ்.

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 22 June 2011 02:33 AM

    அல்லாஹுத்தஹாலா மத்திய கிழக்கு நாடுகளுக்கு கொடுத்த அவனது ஒப்பற்ற அருட்கொடைகளில் ஒன்றுதான் இந்த ஈச்சை மரமும் அதன் கனியும். இது கனிவர்கங்களில் மகத்துவமானது .முஸ்லிம்களுக்கு இது புனிதமான கனி. எங்கள் இதயக்கனி அண்ணல் நபிகளாரின் நினைவும் சஹாபா பெருமக்களின் வாழ்க்கை சம்பவங்களும் இந்த ஈச்சை கனியுடன் நாவுக்கு மட்டுமல்ல, இதயத்துக்கும் இனிக்கும், இஸ்லாத்தின் ஒரு புனித நினைவு சின்னத்தை பசுமையாக பதித்துள்ள காத்தான்குடிக்கு இனி அருள் மழைபெய்யும். அல்ஹம்துலில்லா .

    Reply : 0       0

    H.Saleem Wednesday, 22 June 2011 04:49 AM

    அல்ஹம்துலில்லாஹ் ஊருக்கு உழைப்போர் இருக்கும் வரை ஊர் செழிக்கும்.

    Reply : 0       0

    Najeem Wednesday, 22 June 2011 05:21 AM

    எல்லா அரசியல்வாதிகளும் செய்ய வேண்டும் என்ற அவா இருந்தால் நமது பிரதேசமெல்லாம் வளம்பெறும்.

    Reply : 0       0

    Sivaji Ganeshan Wednesday, 22 June 2011 01:13 PM

    ஹிஸ்புல்லாஹ்! ஒட்டகம் எங்கப்பா ?

    Reply : 0       0

    நளீம் Wednesday, 22 June 2011 04:27 PM

    அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறாதீங்க. நம்மட முதலாளிமார் அவங்கட கடையை கொஞ்சம் பின்னால நகர்த்தி வீதிய அகலமாக்க இடம்கொடுக்க வேண்டுமே............. பிரச்சினை எங்கிருக்கிறது என்பதனை பாருங்க............. நமக்கு பேரீச்சை மர அழகு தேவையில்ல வீதியை சுத்தமாக வைத்திருந்தாலே போதும்ங்க.

    Reply : 0       0

    jaliyuath Wednesday, 22 June 2011 07:00 PM

    இதெல்லாம் நல்ல கதைதான். ஆனால் காத்தான்குடில இது வரைக்கும் வரதட்ஷனை கொடுமைய நிறுத்த முடியவில்லை.

    Reply : 0       0

    xlntgson 0776994341;0716597735 sms only Wednesday, 22 June 2011 09:06 PM

    jaliyuath, வரதட்சனை பற்றி நான் வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பத்தில் பதிலளிக்கின்றேன். இத்துடன் தொடர்புடைய ஒட்டகம்
    பற்றி கூற விரும்புகின்றேன். பாலைவனமாக இல்லாவிட்டாலும் இங்கே பேரீச்சம் பழங்களை பயிரிட வேண்டும் என்று ஆவல் இருக்கிறதே அது போதும். ஆஸ்திரேலியாவில் 12 இலட்சம் வன ஒட்டகங்களை கொன்றொழிக்க தீர்மானித்து விட்டனர் அவற்றால் ஒரு பலனும் அவர்களுக்கு இல்லை என்றும் மதங்கொண்டு கிராம வாசிகளுக்கு அழிவை ஏற்படுத்துகின்றன என்றும் அந்த ஒட்டகங்களை கேட்டு சவுதி எகிப்து போன்ற நாடுகள் விண்ணப்பித்தமைக்கு மறுப்பாம்.

    Reply : 0       0

    nawas mohammed Wednesday, 22 June 2011 11:41 PM

    ஆஹா என்ன பேரீச்சம் பழமும் காத்தான்குடிக்கு வந்துவிட்டதா?
    அடுத்து பெற்றோலும் வரலாம் இறைவன் நாடினால்...

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 23 June 2011 01:54 AM

    பேரீச்சை மரவளர்ப்புக்கும் வரதட்சணைக்கும் சம்பந்தமில்லாத முடிச்சி போடாதீர்கள். பசுமைமையை இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அழகுபடுத்தியுள்ளனர். வரதட்சனண அங்கு ஒழியும்வரை ஈச்சைமரம் நாட்டக் கூடாதா?

    Reply : 0       0

    H.Saleem Thursday, 23 June 2011 02:20 AM

    நல்லது செய்வதுமில்லை செய்பவர்களை பாராட்டுவதுமில்லை. இதுதான் எம்மவர் குணம்.
    வரதட்சனை ஒழிய தானும் திருந்தனும் ஊரையும் திருத்தனும்.

    Reply : 0       0

    mubarak Thursday, 23 June 2011 03:28 AM

    நல்லதை நல்லதென சொல்லும் மனம் வேண்டும்,

    பாராட்டளுக்குரியவர் எவராயினும் பாராட்ட திறந்த மனம் வேண்டும்,

    நல்லதை செய்தவன் எதிரியாயினும் போற்றும் பெருந்தன்மை வேண்டும்,

    ஆனால் என்னால் முடியாததை இன்னொருவன் செய்யும்பொது புகல மனம் வராவிட்டாலும் பரவாயில்ல பொறாமை வேண்டவே வேண்டாம்...

    வெல்டன் ஹிஸ்புல்லாஹ்

    Reply : 0       0

    Aliyar Saturday, 25 June 2011 11:10 PM

    மாஷா அல்லாஹ்

    Reply : 0       0

    mohamed Wednesday, 29 June 2011 04:31 AM

    ஈச்சமரம் காய்க்கும் ஆனா பழுக்காதாம், ஏன்? சொல்றன் கேளுங்க. அதுக்கு சூடு போதாவாம் 50 பாகை செல்சியஸ் வேணுமாம். ஓடிபோய் ஹிஸ்புல்லாஹ்ட பூட்டச்சொல்லுங்கோ.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .