2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரவேற்பு...

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 12 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியாவிலிருந்து ஒரு தொகுதி இலங்கை அகதிகள் படகு மூலம்  கொழும்புத் துறைமுகத்தை இன்று புதன்கிழமை வந்தடைந்தனர். இலங்கை திரும்பிய மேற்படி அகதிகளை பொருளாதார அபிவிருத்தி  அமைச்சர் பசில் ராஜபக்ஷ வரவேற்றார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதி  மைக்கல்  ஸ்வாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் தாமாகவே இலங்கை திரும்புபவர்களுக்கான உதவித் திட்டத்தின் கீழ் இலங்கை அகதிகள் நாடு திரும்புகின்றனர். அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயமும் மீள்குடியேற்ற அமைச்சும் இந்தத் திட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0

  • neethan Wednesday, 12 October 2011 07:46 PM

    தாமாகவே திரும்பி வருபவர்களை சங்கடத்திற்கு ஆளாக்கிவிடாதீர்கள்.வரவு மகிழ்ச்சியானதாக அமையட்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .