2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெறுங்கையில் பாம்பு பிடிக்கும்...

Kogilavani   / 2013 ஜூலை 27 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், அம்பாறையில் வசித்து வருகின்ற ஒருவர் வெற்று கைகளினால் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டுவருகின்றார்.

கெஸ்பேவ பிரதேசத்தைச்சேர்ந்த கயான் சுதீப ராஜபக்ஷ என்ற சிற்ப கலைஞரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியை அடுத்து அவரது மனைவிக்கு அம்பாறையில் வேலை கிடைத்துவிட்டது.

அவர் தனது சிற்ப வேலைகளுக்கு மேலதிகமாக பாம்புகளையும் பிடித்து காடுகளில் விட்டுவிடுகின்றார்.  கடந்த 10 வருடங்களாக இவ்வாறான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுவருவதாகவும் இதுவரையும் 90 க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து காடுகளில் விட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாம்புக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் அதனை பிடிக்கும் அவர் பாம்பாட்டிகளிலிடமிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட பாம்புகளை கொள்வனவு செய்து காடுகளில் விட்டுள்ளார்.

பாம்பாட்டிகளிடமிருந்து கொள்வனவு செய்ய ஒரு பாம்புக்கு 4500 ரூபா முதல் 6000 ரூபா வரையிலும் செலவழித்துள்ளார்.
மனிதர்களுக்கு வாழும் சுதந்திரம் இருப்பது போல பாம்புகளுக்கும் வாழும் சுதந்திரம் இருக்கின்றது. அதனை யாருமே மீறிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறான புண்ணிய காரியங்களை செய்துவருவதாகவும் குறித்த இளைஞன் தெரிவித்துள்ளார். படங்கள்: வசந்த சந்திரபால







You May Also Like

  Comments - 0

  • AMBI. Monday, 29 July 2013 07:56 AM

    மனித மனிதன். இவந்தான் மனிதன். பாம்பை பிடித்து அடிப்பவன் மனிதனா, பிடித்த பாம்பை விடுபவன் மனிதனா...?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .