2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்து....

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவரத்தினம் கபில்நாத்

மதவாச்சி, பூணாவ பகுதியில் இன்று (01) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கன்டர் ரக வாகனமொன்று மின்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X